செய்திபிரதான செய்தி

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

கிராண்ட்பாஸ் பகுதியில் 36 வயதுடைய நபர் ஒருவர் கத்தரிக்கோலால் தாக்கப்பட்ட நிலையில் குறித்த உயிரிழந்துள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 26 ஆம் திகதி சந்தேகநபருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து கத்தரிக்கோலால் தாக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் தாக்குதலில் பலத்த காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொலையுடன் தொடர்படைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button