உலகளாவிய தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உலக தமிழ் பொறியியலாளர் குழுமம் சார்பில் இப்தார் நிகழ்வு சனிக்கிழமை (23) கத்தாரிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்நிகழ்வில் எழுமின் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் பற்றி கத்தார் எழுமின் அமைப்பின் தலைவரான திரு.சக்திவேல் மகாலிங்கம் உரையாற்றியதோடு,பொறியாலாளர் துறை தொடர்பாக விளக்கங்கள் உலக தமிழ் பொறியாயலாளர் குழும கத்தார் பிரதிநிதியான திரு. கார்த்திக் கடப்பா அவர்களால் வழங்கப்பட்டது.
மேலும்,சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள 13 வது உலக தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு பற்றி கத்தார் எழுமின் அமைப்பின் இணைத் தலைவர் திரு.மகாதேவன் தெளிவுபடுத்தினார்.
மேலும், இந்நிகழ்வில் கத்தாரில் உள்ள முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கத்தாரில் உள்ள தமிழ் அமைப்புகளின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.