இலங்கை கிழக்கு மாகாணம் கல்முனை ஸாஹிரா கல்லூரியில் 2002 ஆம் ஆண்டு O/L மற்றும் 2005 ஆம் ஆண்டு A/L கல்விபயின்று தற்போது கத்தாரில் வசிக்கும் பழைய மாணவர்களின் ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் மிகவும் விமர்சையாக இடம் பெற்றது.
நேற்று சனிக்கிழமை (23) Rotana Restaurant இல் மிக சிறப்பான முறையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் கத்தாரில் தொழில் நிமித்தம் வசித்து வரும் கல்முனையைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஸ்கை தமிழ் ஊடக அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.