கிழக்கு மாகாணம்பிரதான செய்தி
ரிதிதென்ன மையவாடிக்கான சுற்று மதில் தொகுதி திறந்து வைப்பு. பிரதம அதிதியாக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் பங்கேற்பு.
(எம்.எஸ்.எம். சஜீ – ஊடகப்பிரிவு)
மட்டக்களப்பு ரிதிதென்ன பகுதியில் மிக நீண்டகால தேவையாக காணப்பட்ட மையவாடிக்கான சுற்று மதில் தொகுதி அல்-நூர் தொண்டு நிறுவனத்தின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.
அல்-நூர் தொண்டு நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எஸ்.எம். அலியார் தலைமையில் இந்நிகழ்வு இடம் பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் பங்கேற்று சுற்று மதில் தொகுதியினை திறந்து வைத்தார்.
இதன்போது இச்சமூக சேவை திட்டத்திற்கு பங்காற்றியவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்வில் ஊரின் முக்கியஸ்தர்கள் பொது மக்கள் என பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.